திருப்பூரில் இளநீர் வியாபாரிக்கு கத்திகுத்து : கூலிப்படையினர் 5 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளநீர் வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக கூலிப்படையினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளநீர் வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக கூலிப்படையினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாராபுரம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே இளநீர் கடை நடத்தி வருபவர் இளையபாரதி. இவர் நேற்று இரவு தனது கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 5 மர்மநபர்கள், பயங்கர ஆயுதங்களால் இளநீர் வியாபாரி இளையபாரதியை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதனால், பலத்த காயமடைந்த அவர், சத்தம் போட்டுள்ளார். 

இதனை கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனைப் பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், அவர்கள் இளையபாரதியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த சோதனை சாவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், தப்பி ஓடிய 5 பேரை விரட்டிச் சென்றனர். அவர்களில் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். மற்ற 3 பேர் காரில் தப்பி விட்டனர். 

இது குறித்து அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, திருப்பூர் எம்.எஸ். நகரில் போலீசார் சோதனை நடத்திய போது காரில் தப்பி சென்ற மற்ற 3 பேரும் பிடிபட்டனர். பின்னர், 5 பேரையும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முருகன், காளிமுத்து, ஜெய் கணேஷ், மணிகண்டன், இம்ரான் என்பது தெரியவந்தது

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...