திருப்பூரில் ரேசன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர் : முறையாக பொருட்களை விநியோகம் செய்யாத ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : முறையாக பொருட்களை விநியோகம் செய்யாத ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 



நொய்யல் வீதியில் உள்ள எல்.கே.ஓ.,36 என்ற ரேசன் கடையில் 500-க்கும் மேற்பட்ட ரேசன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தக் கடையினை அதிகாரிகள் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே திறப்பதாகவும், அந்த சமயங்களிலும் சரியான முறையில் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



மேலும், ரேசன் பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட அதிக தொகை கேட்பதாவும், இன்றைய தினம் மண்ணெண்ணெய் வழங்குவதாகக் கூறிவிட்டு, கடையை திறக்காததால் ரேஷன் அட்டைதாரர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் கடையினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால், தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...