5 கிலோ வணிக எல்.பி.ஜி., சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியது இந்தியன் ஆயில் நிறுவனம்

கோவை : தொழில்முறை இஸ்திரி பெட்டி உபயோகத்திற்காக 5 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை : தொழில்முறை இஸ்திரி பெட்டி உபயோகத்திற்காக 5 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 



கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 கிலோ வணிக எல்.பி.ஜி., சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில அலுவலகத்தின் செயல் இயக்குநர் ஆர். சித்தார்தன், கோவை விநியோகஸ்தர் சங்க தலைவர் வி. நாகராஜு, கோவை பகுதி அலுவலகத்தின் முதுநிலை பகுதி மேலாளர் அலெக்சி ஜோசப் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். 



நிகழ்ச்சியில் 5 கிலோ எல்.பி.ஜி., சிலிண்டர்களை பயன்படுத்தி தொழில்முறை இஸ்திரி பணியை மேற்கொள்வது பற்றிய செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. அத்தருணத்தில், பெருமளவிலான எல்.பி.ஜி., விநியோகஸ்தர்களும், இஸ்திரி பணியாளர்களும் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொண்டனர். 



நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அலுவலகத்தின் செயல் இயக்குநர் சித்தார்தன் பேசியதாவது :- எல்.பி.ஜி., எரிபொருள் மாற்றம் மட்டுமல்ல வாழ்க்கையையும் மாற்றும் வல்லமை படைத்தது என்பது நிரூபணமான ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக எல்.பி.ஜி.,யின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. வர்த்தக செயல்பாடுகளில் உபயோகம் என்பது ஒருபுறமிருக்க தொழில்துறையிலும், பல்வகையான பயன்பாடுகளுக்கு உரியதாக உள்ளது. 



இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நானோகட் என்பது எல்.பி.ஜி., சார்ந்த தயாரிப்பு. இது அதிக அளவிலான தெர்மல் கட்டிங் செயல்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு இது சிக்கனமானதாகவும் தனிச்சிறப்பு தரம் தருவதாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிசி ஆலைகளின் உலர்ந்த உமி யூனிட்டுகளுக்கு மாற்றாக, இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.பி.ஜி.,யை அறிமுகப்படுத்தியுள்ளது. அது மட்டுமா..? ஜவுளி ஆலை தொழில், கட்டிட துறை, உலோகத் துறை, ஆட்டோமோட்டிவ், அச்சு தொழில், கண்ணாடி தயாரிப்பு, இராசயனம், வாசனை திரவியங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எல்.பி.ஜி., வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...