கோவை : சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் ஜெகதீஸ்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை : சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் ஜெகதீஸ்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஆக.,1-ம் தேதி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜெகதீஸ்குமாரை கைது செய்த போலீசார், அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி, கார் ஓட்டுநர் ஜெகதீஸ்குமார் சார்பில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகதீஸ்குமாரின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஆக.,1-ம் தேதி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜெகதீஸ்குமாரை கைது செய்த போலீசார், அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி, கார் ஓட்டுநர் ஜெகதீஸ்குமார் சார்பில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகதீஸ்குமாரின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.