கோவையில் மாடியிலிருந்து தள்ளியதில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் : போலி சான்றிதழ் தயாரித்தவருக்கு ஜாமீன்

கோவை: நரசிபுரம் அருகே பயிற்சியின் போது மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.


கோவை: நரசிபுரம் அருகே பயிற்சியின் போது மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

நரசிபுரம் கலைமகள் கல்லூரியில் கடந்த ஜுலை 12-ம் தேதி நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, கல்லூரி மாடியில் இருந்து குதிக்க மறுத்த மாணவி லோகேஸ்வரியை போலி பயிற்சியாளர் ஆறுமுகம் தள்ளிவிட்டதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் மற்றும் அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த சிவகாசியைச் சேர்ந்த யோகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



இந்த வழக்கில் கைதான யோகநாதன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குணசேகரன் யோகநாதனிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...