கோவையில் ஆளில்லா விமானம் மூலம் வனவிலங்குகள் நடமாட்டம், வனப்பகுதிகளை கண்காணிக்க நடவடிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை மக்கள் பாதுகாப்பிற்காக இடமாற்றம் செய்யவோ, முகாம்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை மக்கள் பாதுகாப்பிற்காக இடமாற்றம் செய்யவோ, முகாம்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் பெரியதடாகம் அருகே மலையடிவார வனப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் யானைகள் நடமாட்டம் இன்று கண்காணிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆளில்லா விமானம் மூலம் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிப்பது இதுவே முதல் முறையாகும்.



இதையடுத்து, கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மாவட்டத்தில் மனித வனவிலங்கு மோதல் அதிகமாக உள்ளது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் வனவிலங்குகள் நடமாட்டம், வனப்பகுதிகளை கண்காணிக்க முடியும். ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து விரட்ட முயற்சிக்க உள்ளோம்," என்றார்.

மேலும், இந்த சோதனை வெற்றி பெற்றால் தொடர்ந்து ட்ரோன் பயன்படுத்தப்படும் எனவும் தமிழகத்தில் முதல் முறையாக ட்ரோன் கோவை வனப்பகுதியில் தான் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை மக்கள் பாதுகாப்பிற்காக இடமாற்றம் செய்யவோ, முகாம்களுக்கோ கொண்டு செல்ல அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...