ரயில்வே மற்றும் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து கோவை ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம்

கோவை: ரயில்வே மற்றும் சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் நாடகம் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: ரயில்வே மற்றும் சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் நாடகம் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவையில் உள்ள ரயில் நிலையத்தில் ரூட்ஸ் நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்லூரி சார்பில் ரயில்வே மற்றும் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில், ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும், ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும் மற்றும் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்யக் கூடாது என்பது குறித்து நாடகம் மூலமாக தத்ரூபமாக மாணவர்கள் நடித்து காண்பித்தனர். 



இதனிடையே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஓடும் ரயில்களில் யாரும் ஏற வேண்டாம். அதே போல ரயில்கள் நிற்கும் முன்பாக யாரும் இறங்க வேண்டாம். ரயில்வே விபத்துக்களை தடுக்க, காவல் துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது," என்றார். 



மேலும், சென்னையில் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள் தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விபத்துகளை தடுக்க ரயில்வேயில் ஆராய்ச்சி செய்து தொழிநுட்ப ரீதியாக மாற்றங்கள் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே பாதுகாப்பு குழு ஏற்படுத்தி வருகிறது எனவும் இந்த விபத்தில் காவல் துறையினர் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...