அ.தி.மு.கவுக்கு தி.மு.க., ஒரு சவாலே கிடையாது : கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

கோவை : தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ள நிலையில், அ.தி.மு.க.,விற்கோ, பொதுமக்களுக்கோ தி.மு.க., ஒரு சவாலே கிடையாது என கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


கோவை : தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ள நிலையில், அ.தி.மு.க.,விற்கோ, பொதுமக்களுக்கோ தி.மு.க., ஒரு சவாலே கிடையாது என கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். கோவையில் அமையவுள்ள மேற்கு புறவழிச்சாலை மக்களின் கோரிக்கை ஏற்றே அமைக்கப்படுகிறது. மக்கள் பயணத்தை வேகமாக்கவே புறவழிச்சாலைகள் அமைக்கப்படுகின்றன. 

ஸ்டாலின் தலைமை பொறுப்பில் இருந்த போதுதான் ஆர்.கே.,நகரில் தி.மு.க., டெபாசிட் போனது. மக்களுக்கோ, அ.தி.மு.க.,விற்கோ தி.மு.க., ஒரு சவால் கிடையாது. மு.க., அழகிரி தனிக்கட்சி தொடங்குவது என்ற தகவல் எல்லாம் அவர்களின் உட்கட்சி விவகாரம்.

நடிகர் திலகம் சிவாஜி சிலை நீதிமன்றம் உத்தரவுப்படியே மாற்றப்பட்டது. அ.தி.மு.க.,வும், நாங்களும் சிவாஜி மீது பெரிய மதிப்பு வைத்திருப்பவர்கள். இது சிவாஜி குடும்பத்திற்கும் தெரியும். மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக் கூடாது எனக் கூறியவர்கள், கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்றவுடன் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெற்றனர். 

அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோரை கட்சி ரீதியான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவே சந்தித்தார். அமைச்சர் ஜெயகுமாருடன் ஏற்பட்ட பிரச்சினை என யார் சொன்னது..?. அ.தி.மு.க.,விற்கு தனிப்பட்ட முறையில் யாரும் (டி.டி.வி., தினகரன்) எதிரியல்ல. தேர்தலில் எங்களை எதிர்த்துப் போட்டியிடுகின்ற கட்சியை எதிர்க்கின்ற கட்சியாக பார்க்கின்றோம், என்றார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...