இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



வாகன விபத்துகளை தடுக்கவும், மனித உயிரிழப்புகளைக் காக்கவும் இருசக்கர வாகனத்தில் பின்வரிசையில் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போக்குவரத்து போலீசாரும் வாகன ஓட்டிகள் இடையே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், அபராதத்தையும் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தலைக்கவசம், உயிர்கவசம் என்பதை வலியுறுத்தி மேட்டுப்பாளையம், சிறுமுகை போலீசார் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள் சென்னகேசவன் மற்றும் இளங்கோ ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணியை தொடங்கி வைத்தனர். நகரின் முக்கிய சாலைகளின் வழியே வந்த இந்தப் பேரணி புறக்காவல் நிலையங்களில் முடிவடைந்தது. 

இதில், காவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்து ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை பொதுமக்களுக்கு உணர்த்தினர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...