காட்டு யானைகள் ஊடுருவலை தடுக்கக் கோரி தேவர்சோலை பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம்

நீலகிரி : காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கக் கோரி தேவர்சோலை பகுதி மக்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி : காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கக் கோரி தேவர்சோலை பகுதி மக்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெரும்பாலும் வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை பொன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதும், வேட்டையாடி வருவதும் வாடிக்கையாகியுள்ளது. 

குறிப்பாக, கடந்த சில நாட்களாக கூடலூரை அடுத்த தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் உயிர்பீதியுடனேயே காணப்படுகின்றனர். 

இந்த நிலையில், காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுக்கக் கோரி தேவர்சோலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...