இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் : தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணியவேண்டும் என போக்குவரத்துக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

அதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் இந்தாண்டு ஜூலை வரை 38,491 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதில் 15,601 விபத்துக்கள் இருசக்கர வாகனங்களால் நிகழ்ந்துள்ளன. அதில் 7,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 2,476 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

இந்த உத்தரவை மீறி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும், இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...