கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பாளர் பரிசீலனை : தேர்தல் அதிகாரியை கடத்திச் சென்ற போலீசாரால் பரபரப்பு

திருப்பூர் : உடுமலை அருகே கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனையின் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் தேர்தல் அதிகாரியை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : உடுமலை அருகே கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனையின் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் தேர்தல் அதிகாரியை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை அருகே குமரலிங்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிர்வாகக் குழு தேர்வு நடைபெற்றது. இதில், அ.தி.மு.க., மற்றும் டி.டி.வி., தினகரனின் அ.ம.மு.க., நேரடியாகப் போட்டியிட்டது. கடந்த சனிக்கிழமை தேர்தல் அதிகாரி ஆனந்தராஜ் மூலமாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இன்று வேட்பாளர் பரிசீலனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, காலை முதல் இரு கட்சியினரும் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் திரண்டனர். 



இருப்பினும், காலை முதல் எந்த நபரின் மனுக்களும் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாலை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்படுவது போல, அ.தி.மு.க., வேட்பாளர்கள் 11 போ் மனுக்கள் மட்டும் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவித்தார். அத்துடன், மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகக் கூறி விட்டு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் அணி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு பலகையில் தோ்வாளா்கள் பெயர் பட்டியலை ஒட்டினார்.



இதனிடையே, பரிசீலனையே செய்யாமல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறி, டி.டி.வி., தினகரன் கட்சியினர் அதிகாரியிடம் விளக்கம் கேட்க முற்பட்டனர். ஆனால், அவா்களை உள்ளே விடாமல் தடுத்த போலீசார், தோ்தல் அதிகாரி ஆனந்தராஜை போலீசார் வாகனத்தில் கடத்தி செல்வது போல அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...