திருப்பூர் : உடுமலை அருகே கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனையின் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் தேர்தல் அதிகாரியை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : உடுமலை அருகே கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனையின் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் தேர்தல் அதிகாரியை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை அருகே குமரலிங்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிர்வாகக் குழு தேர்வு நடைபெற்றது. இதில், அ.தி.மு.க., மற்றும் டி.டி.வி., தினகரனின் அ.ம.மு.க., நேரடியாகப் போட்டியிட்டது. கடந்த சனிக்கிழமை தேர்தல் அதிகாரி ஆனந்தராஜ் மூலமாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இன்று வேட்பாளர் பரிசீலனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, காலை முதல் இரு கட்சியினரும் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் திரண்டனர்.

இருப்பினும், காலை முதல் எந்த நபரின் மனுக்களும் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாலை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்படுவது போல, அ.தி.மு.க., வேட்பாளர்கள் 11 போ் மனுக்கள் மட்டும் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவித்தார். அத்துடன், மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகக் கூறி விட்டு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் அணி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு பலகையில் தோ்வாளா்கள் பெயர் பட்டியலை ஒட்டினார்.

இதனிடையே, பரிசீலனையே செய்யாமல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறி, டி.டி.வி., தினகரன் கட்சியினர் அதிகாரியிடம் விளக்கம் கேட்க முற்பட்டனர். ஆனால், அவா்களை உள்ளே விடாமல் தடுத்த போலீசார், தோ்தல் அதிகாரி ஆனந்தராஜை போலீசார் வாகனத்தில் கடத்தி செல்வது போல அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடுமலை அருகே குமரலிங்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிர்வாகக் குழு தேர்வு நடைபெற்றது. இதில், அ.தி.மு.க., மற்றும் டி.டி.வி., தினகரனின் அ.ம.மு.க., நேரடியாகப் போட்டியிட்டது. கடந்த சனிக்கிழமை தேர்தல் அதிகாரி ஆனந்தராஜ் மூலமாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இன்று வேட்பாளர் பரிசீலனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, காலை முதல் இரு கட்சியினரும் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் திரண்டனர்.

இருப்பினும், காலை முதல் எந்த நபரின் மனுக்களும் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாலை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்படுவது போல, அ.தி.மு.க., வேட்பாளர்கள் 11 போ் மனுக்கள் மட்டும் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவித்தார். அத்துடன், மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகக் கூறி விட்டு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் அணி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு பலகையில் தோ்வாளா்கள் பெயர் பட்டியலை ஒட்டினார்.

இதனிடையே, பரிசீலனையே செய்யாமல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறி, டி.டி.வி., தினகரன் கட்சியினர் அதிகாரியிடம் விளக்கம் கேட்க முற்பட்டனர். ஆனால், அவா்களை உள்ளே விடாமல் தடுத்த போலீசார், தோ்தல் அதிகாரி ஆனந்தராஜை போலீசார் வாகனத்தில் கடத்தி செல்வது போல அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.