கோவை: இந்தியா முழுவதும் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் 8 அம்ச கோரிக்கைகளுடன் விவசாயிகள் கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் மூலம் பாரத பிரதமருக்கு அனுப்பக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: இந்தியா முழுவதும் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் 8 அம்ச கோரிக்கைகளுடன் விவசாயிகள் கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் மூலம் பாரத பிரதமருக்கு அனுப்பக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில், விவசாய தொழிலாளிகளின் அனைத்து கடன்களையும் விடுவிக்க வேண்டும், உழுபவனுக்கே நிலம் சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 பென்சன் வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலை தொகை ரூ.2000 கோடியைப் பெற்று தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
மனுவில், விவசாய தொழிலாளிகளின் அனைத்து கடன்களையும் விடுவிக்க வேண்டும், உழுபவனுக்கே நிலம் சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 பென்சன் வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலை தொகை ரூ.2000 கோடியைப் பெற்று தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.