கோவை: 144 பேர் பகுதி கதவடைப்பு விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: 144 பேர் பகுதி கதவடைப்பு விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 144 தொழிலாளர்களை கடந்த 16-ம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியது. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர்.
அதில், கூறியிருப்பதாவது:- பகுதி கதவடைப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள 144 பேரை மீண்டும் பணியில் சேர்க்க பிரிக்கால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.ஐ.சி.சி.டி.யு., அமைப்பினைச் சேர்ந்த 144 தொழிலாளர்களை வேண்டும் என்றே நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் தொழிலாளர்களிடம் இருந்து செய்யப்பட்ட பிடித்தங்களை திரும்பக் கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தகுதியான சங்கத்தை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னரே, இந்த வேலை நீக்க நடவடிக்கையினை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது.
பாரபட்சம் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த தகுதியான சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் நிர்வாகம் தீர்த்து கொண்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 144 தொழிலாளர்களை கடந்த 16-ம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியது. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர்.
அதில், கூறியிருப்பதாவது:- பகுதி கதவடைப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள 144 பேரை மீண்டும் பணியில் சேர்க்க பிரிக்கால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.ஐ.சி.சி.டி.யு., அமைப்பினைச் சேர்ந்த 144 தொழிலாளர்களை வேண்டும் என்றே நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் தொழிலாளர்களிடம் இருந்து செய்யப்பட்ட பிடித்தங்களை திரும்பக் கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தகுதியான சங்கத்தை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னரே, இந்த வேலை நீக்க நடவடிக்கையினை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது.
பாரபட்சம் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த தகுதியான சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் நிர்வாகம் தீர்த்து கொண்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.