கோவையில் ஊதிய உயர்வு கோரி கஞ்சித் தொட்டி திறந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் ஊழியர்கள்

கோவை: ஊதிய உயர்வு கோரி 8-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று கஞ்சித் தொட்டி திறந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: ஊதிய உயர்வு கோரி 8-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று கஞ்சித் தொட்டி திறந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் கோவை, கமுதகுடி, காளையார் கோவில் ஆகிய இடங்களில் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பஞ்சாலைகளில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கக் கோரி, கடந்த 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 8-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை சி.எஸ்.டயிள்யூ ஆலை முன்பாக தொழிலாளர்கள் இன்று கஞ்சித் தொட்டி திறந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தேசிய பஞ்சாலை கழக ஆலை நிர்வாகம் உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும், இதே கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் உள்ள 5 பஞ்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...