கோவை: வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் நடுமலை, தாய்முடி, சோலையார், ஊசிமலை அய்யர்பாடி உட்பட பல தேயிலை தோட்டங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை தோட்ட சாலைகள், தேயிலை செடிகள் சுமார் 5 அடியிலிருந்து 10 அடி வரை பள்ளத்தில் சரிந்துள்ளன.

இதே போல் சோலையார் எஸ்டேட் முதல் பிரிவில் ஏற்பட்ட விரிசலில் இருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்களின் கழிப்பறைகள் மண்ணுக்குள் புதைந்தன.

பாதுகாப்பு கருதி தொழிலாளர்களின் குடியிருப்பை காலி செய்து மாற்று இடத்திற்குச் செல்ல நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தேயிலை தோட்டங்களில் ஏற்பட்டு வரும் விரிசல்கள் நில நடுக்கத்தின் அறிகுறியாக இருக்குமா? என்ற அச்சத்தில் வால்பாறை மக்கள் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் நடுமலை, தாய்முடி, சோலையார், ஊசிமலை அய்யர்பாடி உட்பட பல தேயிலை தோட்டங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை தோட்ட சாலைகள், தேயிலை செடிகள் சுமார் 5 அடியிலிருந்து 10 அடி வரை பள்ளத்தில் சரிந்துள்ளன.

இதே போல் சோலையார் எஸ்டேட் முதல் பிரிவில் ஏற்பட்ட விரிசலில் இருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்களின் கழிப்பறைகள் மண்ணுக்குள் புதைந்தன.

பாதுகாப்பு கருதி தொழிலாளர்களின் குடியிருப்பை காலி செய்து மாற்று இடத்திற்குச் செல்ல நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தேயிலை தோட்டங்களில் ஏற்பட்டு வரும் விரிசல்கள் நில நடுக்கத்தின் அறிகுறியாக இருக்குமா? என்ற அச்சத்தில் வால்பாறை மக்கள் உறைந்துள்ளனர்.