நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு உரையாற்றினார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு உரையாற்றினார்.
நீலகிரி மாவட்டத்தில் 19 வகை பிளாஸ்டிக்கும், பிளாஸ்டிக்கினால் உருவாகிய பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வணிக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது தடை செய்யப்பட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் அபராத தொகை கட்டாமல் உள்ள கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர். இதனால், பொதுமக்களிடையே தற்போது பிளாஸ்டிக் பயன்பாடும் வருகிறது.
இந்நிலையில், இன்று உதகையில் உள்ள மினி படகு இல்லத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளைவுகள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றார்.
நீலகிரி மாவட்டத்தில் 19 வகை பிளாஸ்டிக்கும், பிளாஸ்டிக்கினால் உருவாகிய பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வணிக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது தடை செய்யப்பட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் அபராத தொகை கட்டாமல் உள்ள கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர். இதனால், பொதுமக்களிடையே தற்போது பிளாஸ்டிக் பயன்பாடும் வருகிறது.
இந்நிலையில், இன்று உதகையில் உள்ள மினி படகு இல்லத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளைவுகள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றார்.