கோவை: மேட்டுப்பாளையத்திற்கு வந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை: மேட்டுப்பாளையத்திற்கு வந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சேலத்தில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டது. வேன் மூலம் ஊர்வலமாக மேட்டுப்பாளையம் எடுத்து வரப்பட்ட அவரது அஸ்தி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டது.

முன்னதாக மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ், பா.ஜ.க., மாநில செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் மேட்டுப்பாளையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவபடத்திற்கும் அஸ்திக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சேலத்தில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டது. வேன் மூலம் ஊர்வலமாக மேட்டுப்பாளையம் எடுத்து வரப்பட்ட அவரது அஸ்தி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டது.

முன்னதாக மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ், பா.ஜ.க., மாநில செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் மேட்டுப்பாளையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவபடத்திற்கும் அஸ்திக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
