கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சி : ஸ்டாலின் மற்றும் கலைத்துறையினர் கோவை வந்தடைந்தனர்.

கோவை: கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள 'மறக்க முடியுமா கலைஞரை' நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சினிமா துறையினர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர்.


கோவை: கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள 'மறக்க முடியுமா கலைஞரை' நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சினிமா துறையினர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர்.

நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இந்து விமானம் மூலம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தடைந்தார்.

அவரைத் தொடர்ந்து, நடிகர்கள் சத்யராஜ், நாசர், பார்த்திபன், ராஜேஷ் மற்றும் மயில்சாமி ஆகியோர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் நடிகர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

நடிகர் நாசர் 

கலைஞரின் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளேன். அவரை பற்றி பேச பெருமை கொள்கிறேன். கருணாநிதி ஒரு வரலாற்றை விட்டுச் சென்றவர்.

நடிகர் பார்த்திபன்

கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர் கலைஞர். எனக்கு தமிழ் மேல் உயிர். அதற்குக் காரணம் கலைஞர். அவரது அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.



நடிகர் ராஜேஷ்

வரலாறு படைக்கும் கலைஞரின் புகழ் அஞ்சலியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.



நடிகர் சத்யராஜ்

கலைஞர் வசனங்கள் எழுதிய பல படங்களில் நான் நடித்து உள்ளேன். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை வந்துள்ளேன்.



என்று நடிகர்கள் கூறினார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...