கோவை: கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள 'மறக்க முடியுமா கலைஞரை' நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சினிமா துறையினர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர்.
கோவை: கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள 'மறக்க முடியுமா கலைஞரை' நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சினிமா துறையினர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர்.
நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இந்து விமானம் மூலம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தடைந்தார்.
அவரைத் தொடர்ந்து, நடிகர்கள் சத்யராஜ், நாசர், பார்த்திபன், ராஜேஷ் மற்றும் மயில்சாமி ஆகியோர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் நடிகர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
நடிகர் நாசர்
கலைஞரின் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளேன். அவரை பற்றி பேச பெருமை கொள்கிறேன். கருணாநிதி ஒரு வரலாற்றை விட்டுச் சென்றவர்.
நடிகர் பார்த்திபன்
கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர் கலைஞர். எனக்கு தமிழ் மேல் உயிர். அதற்குக் காரணம் கலைஞர். அவரது அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

நடிகர் ராஜேஷ்
வரலாறு படைக்கும் கலைஞரின் புகழ் அஞ்சலியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

நடிகர் சத்யராஜ்
கலைஞர் வசனங்கள் எழுதிய பல படங்களில் நான் நடித்து உள்ளேன். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை வந்துள்ளேன்.

என்று நடிகர்கள் கூறினார்.