திருப்பூர்: பல்லடத்தை அடுத்த செஞ்சேரி புதூர் பேருந்து நிறுத்ததில், உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியாக தேங்காய் தொட்டி பாரம் ஏற்றி வந்த லாரி, அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதியது.
திருப்பூர்: பல்லடத்தை அடுத்த செஞ்சேரி புதூர் பேருந்து நிறுத்ததில், உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியாக தேங்காய் தொட்டி பாரம் ஏற்றி வந்த லாரி, அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த கந்தசாமி, ரத்தினம்மாள், எலிசபெத் ராணி உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அடிபட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதே போல், பல்லடம் கள்ளக்கிணறு அருகே காரும் லாரியும் மோதிய விபத்தில், கோவையைச் சேர்ந்த ஹரிவரதன் என்ற 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் அவருடன் பயணித்த அவரது குடும்பத்தினர் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த கந்தசாமி, ரத்தினம்மாள், எலிசபெத் ராணி உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அடிபட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதே போல், பல்லடம் கள்ளக்கிணறு அருகே காரும் லாரியும் மோதிய விபத்தில், கோவையைச் சேர்ந்த ஹரிவரதன் என்ற 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் அவருடன் பயணித்த அவரது குடும்பத்தினர் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.