சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட குடிநீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட குடிநீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை 26 வருடங்களுக்கு செயல்படுத்த

ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்தோடு மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திட்டத்தை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

அப்போது அச்சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி கூறுகையில், "24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளோம். பொது குழாய்கள் அகற்றப்படமாட்டாது, குடிநீர் கட்டணத்தை அரசு மட்டுமே முடிவு செய்யும் என ஆணையர் உறுதியளித்துள்ளார்.

 

ஆனால், உலக அளவில் குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்த அனைத்து நாடுகளிலும் பிரச்சனைகள் வெடித்துள்ளது. லாப நோக்கில் மட்டுமே செயல்படும் தனியார் வசம் குடிநீர் வினியோகம் ஒப்படைக்கப்படுவதால், சேவையாக இல்லாமல், தண்ணீர் ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது இத்திட்டத்தை மாநகராட்சி நிர்வாகமே செயல்படுத்த வேண்டும் என அனைவரும் கூறினர். எனவே, மக்களிடம் கருத்துகளை பெற்று, சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அக்டோபர் முதல் வாரத்தில் மக்களைத் திரட்டி நடைப்பயணம் நடத்தப்படும்." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...