நீலகிரி: மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது என்று நீலகிரியில் நடைபெற்ற விழா ஒன்றில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராம் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி: மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது என்று நீலகிரியில் நடைபெற்ற விழா ஒன்றில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராம் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குட்ஷெப்பர்டு பள்ளியில் பி.சி.தாமஸ் அறக்கட்டளை தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் என்.ராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அறக்கட்டளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, "இந்தியா சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் சில துறைகளில் வளர்ந்திருந்தாலும் கல்வி, சுகாதாரம், சம வாய்ப்பு, வருவாய், சுற்றுச்சூழல் உட்பட பல துறைகளில் பின் தங்கியுள்ளோம். இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதை அரசு, தன்னார்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கையில் எடுக்க வேண்டும்.
நமது நாட்டில் மதவாதம் கடந்த பல ஆண்டுகளாக தவறான பாதையில் பயணிக்கிறது. இது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மதவாதம் அரசியல் சாயம் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையின மற்றும் சிறுபான்மையின மதவாதம் அதிகரித்திருக்கிறது..
இன்றைய காலகட்டத்தில் மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது. அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை பயன்படுத்தக் கூடாது. கடந்த 70 ஆண்டுகளில், அரசியல் காரணங்களுக்காக மதவாதத்தைப் பயன்படுத்துவது தொடர்கிறது.
அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தாவிட்டால் மதவாதத்தை கட்டுப்படுத்த முடியும். இது, தொடர்ந்தால் இந்தியா முன்னேற முடியாது." என்றார்.
நீலகிரி மாவட்டம் குட்ஷெப்பர்டு பள்ளியில் பி.சி.தாமஸ் அறக்கட்டளை தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் என்.ராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அறக்கட்டளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, "இந்தியா சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் சில துறைகளில் வளர்ந்திருந்தாலும் கல்வி, சுகாதாரம், சம வாய்ப்பு, வருவாய், சுற்றுச்சூழல் உட்பட பல துறைகளில் பின் தங்கியுள்ளோம். இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதை அரசு, தன்னார்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கையில் எடுக்க வேண்டும்.
நமது நாட்டில் மதவாதம் கடந்த பல ஆண்டுகளாக தவறான பாதையில் பயணிக்கிறது. இது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மதவாதம் அரசியல் சாயம் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையின மற்றும் சிறுபான்மையின மதவாதம் அதிகரித்திருக்கிறது..
இன்றைய காலகட்டத்தில் மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது. அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை பயன்படுத்தக் கூடாது. கடந்த 70 ஆண்டுகளில், அரசியல் காரணங்களுக்காக மதவாதத்தைப் பயன்படுத்துவது தொடர்கிறது.
அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தாவிட்டால் மதவாதத்தை கட்டுப்படுத்த முடியும். இது, தொடர்ந்தால் இந்தியா முன்னேற முடியாது." என்றார்.