மதம் மற்றும் அரசியலை கலக்காதீர் : நீலகிரியில் 'இந்து' ராம் வலியுறுத்தல்

நீலகிரி: மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது என்று நீலகிரியில் நடைபெற்ற விழா ஒன்றில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராம் வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி: மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது என்று நீலகிரியில் நடைபெற்ற விழா ஒன்றில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராம் வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குட்ஷெப்பர்டு பள்ளியில் பி.சி.தாமஸ் அறக்கட்டளை தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் 'தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் என்.ராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அறக்கட்டளை தொடங்கி வைத்து பேசினார்.



அப்போது, "இந்தியா சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் சில துறைகளில் வளர்ந்திருந்தாலும் கல்வி, சுகாதாரம், சம வாய்ப்பு, வருவாய், சுற்றுச்சூழல் உட்பட பல துறைகளில் பின் தங்கியுள்ளோம். இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதை அரசு, தன்னார்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கையில் எடுக்க வேண்டும்.

நமது நாட்டில் மதவாதம் கடந்த பல ஆண்டுகளாக தவறான பாதையில் பயணிக்கிறது. இது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மதவாதம் அரசியல் சாயம் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையின மற்றும் சிறுபான்மையின மதவாதம் அதிகரித்திருக்கிறது.. 

இன்றைய காலகட்டத்தில் மதம் மற்றும் அரசியலை கலக்கக்கூடாது. அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை பயன்படுத்தக் கூடாது. கடந்த 70 ஆண்டுகளில், அரசியல் காரணங்களுக்காக மதவாதத்தைப் பயன்படுத்துவது தொடர்கிறது. 

அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தாவிட்டால் மதவாதத்தை கட்டுப்படுத்த முடியும். இது, தொடர்ந்தால் இந்தியா முன்னேற முடியாது." என்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...