கோவை: மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.,விற்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்றும், அழைப்பு விடுக்கப்பட்டால் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவை: மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.,விற்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்றும், அழைப்பு விடுக்கப்பட்டால் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சென்னையில் கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.,விற்கு இதுவரை அழைப்பில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். இடைத்தேர்தலில் தனித்து நின்றாலும், கூட்டணியுடன் நின்றாலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். தே.மு.தி.க கூட்டணி கிடையாது என்று எடுத்து இருக்கும் கொள்கை முடிவில் மாறாமல் இருக்க வேண்டும்." என்றார்.
"கட்சிக்காக பதவியை இழக்க தயாராக உள்ளேன் என்று என பன்னீர்செல்வம் கூறியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது." என வைகை செல்வன் கூறி இருப்பது தொடர்பான கேள்விக்கு, "அது அவரது சொந்த கருத்து." என்று பதிலளித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சென்னையில் கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.,விற்கு இதுவரை அழைப்பில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். இடைத்தேர்தலில் தனித்து நின்றாலும், கூட்டணியுடன் நின்றாலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். தே.மு.தி.க கூட்டணி கிடையாது என்று எடுத்து இருக்கும் கொள்கை முடிவில் மாறாமல் இருக்க வேண்டும்." என்றார்.
"கட்சிக்காக பதவியை இழக்க தயாராக உள்ளேன் என்று என பன்னீர்செல்வம் கூறியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது." என வைகை செல்வன் கூறி இருப்பது தொடர்பான கேள்விக்கு, "அது அவரது சொந்த கருத்து." என்று பதிலளித்தார்.