இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

கோவை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் வெள்ளலூர் குளத்தில் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

கோவை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் வெள்ளலூர் குளத்தில் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிந்து கொண்டனர். 



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் வெள்ளலூர் குளம் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சமஸ்கார அகாடமியும் இணைந்து இயற்கையைப் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில், 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் ஆறுகளின் முக்கியத்துவம் மற்றும் அதனைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார். 



அப்போது, பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் அடையும் மாசுபாடு குறித்து மணிகண்டன் பேசியதாவது :- பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய்களில் நீர் சாதாரணமாக பாய்ந்து ஓட முடியாதவாறு அடைப்பை ஏற்படுத்துகின்றன. இது குளங்களை வறட்சியடையச் செய்ய முக்கிய காரணியாக இருக்கிறது. வெள்ளலூர் குளம் கடந்த 12 ஆண்டுகளாக நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்தான், என்றார். 



மேலும், இந்த குளத்தினால் பறவைகள், மீன்கள் போன்ற உயிரினங்களும் பயனடைவதை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...