கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பயணிகள் மத்தியில் வெடி குண்டு பீதி தொற்றிக்கொண்டது.
கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பயணிகள் மத்தியில் வெடி குண்டு பீதி தொற்றிக்கொண்டது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று விமான வருகை பகுதியில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று தள்ளு வண்டியில் கிடந்தது. இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் மர்ம பொருள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. அந்த பையை பயணிகள் யாரேனும் தவற விட்டு இருக்கலாம் என கருதிய பாதுகாப்பு படையினர் அதனை விமான நிலையத்திற்குள் பத்திரமாக எடுத்துச் சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் திடீரென சோதனை நடத்தியதன் காரணமாக விமான நிலையத்திற்குச் சென்ற பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பீதி தொற்றிக்கொண்டது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று விமான வருகை பகுதியில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று தள்ளு வண்டியில் கிடந்தது. இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் மர்ம பொருள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. அந்த பையை பயணிகள் யாரேனும் தவற விட்டு இருக்கலாம் என கருதிய பாதுகாப்பு படையினர் அதனை விமான நிலையத்திற்குள் பத்திரமாக எடுத்துச் சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் திடீரென சோதனை நடத்தியதன் காரணமாக விமான நிலையத்திற்குச் சென்ற பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பீதி தொற்றிக்கொண்டது.