கோவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
கோவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டினால் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட்டின் அவசியத்தின் விளம்பரங்களை செய்யவும், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தவும் காவல்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் மற்றும் வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடமும் அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று மதியம் மூன்று மணி முதல் தற்போது வரை 258 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டினால் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட்டின் அவசியத்தின் விளம்பரங்களை செய்யவும், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தவும் காவல்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் மற்றும் வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடமும் அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று மதியம் மூன்று மணி முதல் தற்போது வரை 258 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.