முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் 3 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

திருச்சி முக்கொம்பு மேலணையில் கடந்த 2 நாட்களில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 9 மதகுகள் கடும் வெள்ளப் பெருக்கால் உடைத்தெறியப்பட்டது. இதையடுத்து, உடைந்த மதகுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, தமிழக அமைச்சர்களும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் உடன் சென்று பார்வையிட்டனர். 

மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :- 

மேலணையில் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் பணி முடிந்து விடும். 182 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அணை கட்டப்பட்டது. 1924, 1977, 2013 ஆண்டுகளில் வெள்ளம் வந்த போது உபரி நீர் வெளியேறியது. தற்போது, தொடர்ந்து 8 நாட்களாக உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக மதகுகள் வழியாக தொடர்ந்து வந்ததால் உடைந்து விட்டது. 

விரைவில் புதிய அணை கட்டப்படும். புதிய அணைக்கு மொத்தம் ரூ. 410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 325 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்படும். கொள்ளிடத்தின் வடக்கு பகுதியில் அய்யன் கால்வாயில் ரூ. 85 கோடியில் மேலும் அணையும் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...