முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை நிராகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை நிராகரித்துள்ளது.
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாரில் அதிக நீர் தேக்கியதே காரணம் என்று கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனிடையே, அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாகக் குறைக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர், அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை. அணையில் அதிக தண்ணீர் தேக்க வேண்டாம் என பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை உரிய முடிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக தொடர மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நிலைமை சுமூகமான பின் 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாரில் அதிக நீர் தேக்கியதே காரணம் என்று கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனிடையே, அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாகக் குறைக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர், அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை. அணையில் அதிக தண்ணீர் தேக்க வேண்டாம் என பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை உரிய முடிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக தொடர மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நிலைமை சுமூகமான பின் 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.