திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவியை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவியை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "வெளிநாட்டு நிவாரண நிதியைப் பெற இருக்கும் உத்தரவுகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும். அதில் ஏதாவது பிரச்சனை என்றால், கேரள அரசு அளவில் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு இருக்கும் தடைகளை களைய முயற்சி மேற்கொள்ளப்படும். இயற்கை பேரிடர்களின் போது பிற நாடுகள் உதவ முன்வருவது வழக்கமானது.
கடந்த 2016-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பிற நாடுகள் தானாக முன்வந்து அளிக்கும் நிதியை ஏற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.
கேரள அமைச்சர் தாமஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், "வெளிநாட்டு உதவிகளை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவிற்கு தர முன்வந்த ரூ.700 கோடி நிதியை மத்திய அரசு கேரளாவுக்கு வழங்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "வெளிநாட்டு நிவாரண நிதியைப் பெற இருக்கும் உத்தரவுகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும். அதில் ஏதாவது பிரச்சனை என்றால், கேரள அரசு அளவில் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு இருக்கும் தடைகளை களைய முயற்சி மேற்கொள்ளப்படும். இயற்கை பேரிடர்களின் போது பிற நாடுகள் உதவ முன்வருவது வழக்கமானது.
கடந்த 2016-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பிற நாடுகள் தானாக முன்வந்து அளிக்கும் நிதியை ஏற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.
கேரள அமைச்சர் தாமஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், "வெளிநாட்டு உதவிகளை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவிற்கு தர முன்வந்த ரூ.700 கோடி நிதியை மத்திய அரசு கேரளாவுக்கு வழங்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.