சோதனை அடிப்படையில் கோவை - வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கம்

கோவை: ஒரு வார காலமாக பேருந்து போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து வால்பாறைக்கு ஐந்து பேருந்துகள் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன.

கோவை: ஒரு வார காலமாக பேருந்து போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து வால்பாறைக்கு ஐந்து பேருந்துகள் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது.

இதன் காரணமாக வால்பாறையில் வெள்ளம் சூழ்ந்து பேருந்துகள் எங்கும் செல்லமுடியாத வண்ணம் மண் சரிவுகளும், சாலை விரிசல்களும் ஏற்பட்டன. இதனால் ஒரு வார காலமாக கோவையில் இருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

இதனிடையே, மழையின் தீவிரம் குறைந்து வெள்ள நீர் வடியத் தொடங்கியதை அடுத்து கோவையில் இருந்து வால்பாறைக்கு இன்று முதல் சோதனை அடிப்படையில் (கோவை) அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை-வால்பாறைக்கு முதல்கட்டமாக இன்று முதல் ஐந்து பேருந்துகள் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன. மலைப்பாதையில் மண் சரிவுகள் சாலைகளில் விரிசல் சரிசெய்யப்பட்டு வருகின்றன. நாளை நிலவரம் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்." என்றார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...