கோவை: அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் பயிற்சிப்பட்டறை கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் இன்று நடைபெற்றது.
கோவை: அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் பயிற்சிப்பட்டறை கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் இன்று நடைபெற்றது.
வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மூத்த தலைவர்கள் செல்வராஜ், ரகுராமன், ராஜவேல், பார்த்தசாரதி ராகவேந்திரன் ஆகியோர் இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு பேசினர்.
இதன் பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காப்பீடு, மியூச்சுவல் பண்டு முதலிய துறைகளில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதை மாற்றி வங்கிகளின் ஆதாரப் பணிகளாகிய டெபாசிட் மற்றும் கடன் வழங்கலில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். காப்பீடு போன்ற மூன்றாம் நபர் சேவைகளில் வாடிக்கையாளர் நலம் காக்கப்படவேண்டும்.
வர்த்தகத்திற்கான ஊக்கிகளாக உள்ள வெளிநாட்டு சுற்றுலா போன்றவை மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். வங்கி அதிகாரிகள் சந்திக்கும் இடர்கள், பணிச்சுமை, பொறுப்புகள் இவற்றுக்கேற்ப மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரைக்கேற்ப ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். நாட்டின் ஆதார சேவைக்களமாக விளங்கும் பொதுத்துறை வங்கிகளை லாபத்துடன் செயல்பட வைக்கவும், எளியவர்களின் வாழ்க்கைத்தரத்தினை வங்கித் திட்டங்களின் மூலம் உயர்த்தவும் அதிகாரிகள் கூட்டமைப்பு முழு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மூத்த தலைவர்கள் செல்வராஜ், ரகுராமன், ராஜவேல், பார்த்தசாரதி ராகவேந்திரன் ஆகியோர் இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு பேசினர்.
இதன் பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காப்பீடு, மியூச்சுவல் பண்டு முதலிய துறைகளில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதை மாற்றி வங்கிகளின் ஆதாரப் பணிகளாகிய டெபாசிட் மற்றும் கடன் வழங்கலில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். காப்பீடு போன்ற மூன்றாம் நபர் சேவைகளில் வாடிக்கையாளர் நலம் காக்கப்படவேண்டும்.
வர்த்தகத்திற்கான ஊக்கிகளாக உள்ள வெளிநாட்டு சுற்றுலா போன்றவை மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். வங்கி அதிகாரிகள் சந்திக்கும் இடர்கள், பணிச்சுமை, பொறுப்புகள் இவற்றுக்கேற்ப மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரைக்கேற்ப ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். நாட்டின் ஆதார சேவைக்களமாக விளங்கும் பொதுத்துறை வங்கிகளை லாபத்துடன் செயல்பட வைக்கவும், எளியவர்களின் வாழ்க்கைத்தரத்தினை வங்கித் திட்டங்களின் மூலம் உயர்த்தவும் அதிகாரிகள் கூட்டமைப்பு முழு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.