இன்று முதல் கொச்சி கடற்படை தளத்தில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கம்

கோவை: கொச்சி விமான நிலையத்தில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து கோவை உள்ளிட்ட பிற நகரங்களுக்குப் பயணிகள் சேவை விமானங்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

கோவை: கொச்சி விமான நிலையத்தில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து கோவை உள்ளிட்ட பிற நகரங்களுக்குப் பயணிகள் சேவை விமானங்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. 

கேரள மாநிலத்தையே புரட்டிப் போட்டி கனமழை மற்றும் வெள்ளம், கொச்சி விமான நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக விமான நிலையம் மூடியே கிடக்கிறது. அங்கு இன்னும் தண்ணீர் வடியாததால், 26-ம் தேதி வரை விமான நிலையத்தைப் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கொச்சி கடற்படை தளத்தில் இருந்து கோவை, பெங்களூரூ போன்ற நகரங்களுக்கு இன்று முதல் 70 இருக்கைகளை மட்டுமே கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. 

இயக்கப்படும் விமானங்களின் விபரம் : 

பெங்களூரூ - புறப்படும் நேரம் காலை 06 மணி - கொச்சி சென்றடையும் நேரம் காலை 07.20

கொச்சி - புறப்படும் நேரம் காலை 08.10 மணி - பெங்களூரூ - சென்றடையும் நேரம் காலை 09.30

பெங்களூரூ - புறப்படும் நேரம் காலை 10 மணி - கொச்சி - சென்றடையும் நேரம் காலை 11.30

கொச்சி - புறப்படும் நேரம் நண்பகல் 12.10 மணி - பெங்களூரூ - சென்றடையும் நேரம் பிற்பகல் 01.30

பெங்களூரூ - புறப்படும் நேரம் பிற்பகல் 2.10 மணி - கோவை - சென்றடையும் நேரம் பிற்பகல் 03.10

கோவை - புறப்படும் நேரம் மாலை 03.40 மணி - கொச்சி - சென்றடையும் நேரம் மாலை 04.25

கொச்சி - புறப்படும் நேரம் மாலை 05.15 மணி - கோவை - சென்றடையும் நேரம் மாலை 06.00

கோவை - புறப்படும் நேரம் மாலை 06.30 மணி - பெங்களூரூ - சென்றடையும் நேரம் இரவு 07.30

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...