கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையினால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில், கௌசிகா நதி மட்டும் பொலிவிழந்து காணப்படுவது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையினால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில், கௌசிகா நதி மட்டும் பொலிவிழந்து காணப்படுவது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சிறுவாணி, ஆழியாறு, சோலையாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கோவை மக்களின் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில், கோவையின் வடகிழக்கு பகுதி மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர்.
அதாவது, தற்போதைய மழைக் காலத்தில் அக்ரஹாரா சாமக்குளம், இடிகரை, கூடலூர், தெக்கலூர், கிட்டாம் பாளையம், குன்னத்தூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இதனால், வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 கிராமங்கள்ளில்வறட்சி சூழ்நிலையே நிலவுவதாக பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் தெரிவிக்கின்றன.
"கௌசிகா நதியில் இருந்து வெளியேறும் உபரி நீரின் மூலம் 20 கி.மீ., தொலைவில் உள்ள கிராமங்கள் பயனடைந்து வந்தன. ஆனால், தற்போது, அனைத்து இடங்களிலும் வறட்சியே நிலவுகிறது." என்கிறார் உள்ளூர்வாசி.
மேலும், இப்பகுதிகளில் உள்ள 15 குளங்கள் மற்றும் சிறுசிறு நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. மேலும், இங்குள்ள 27 தடுப்பணைகள் மறுசீரமைக்காததால், நிலத்தடி நீரும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
"நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு போதிய ஆதரவும் மற்றும் போதிய தகவல்கள் இல்லாததே இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு காரணம். இந்தப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு தவறாக கணிக்கப்படுவது முக்கிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, வரை கோவை வடகிழக்கு பகுதிகளில் குறிப்பிடும்படி எந்தவித மழைப் பொழிவும் இல்லை." என கௌசிகா நதி பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த பி.கே., செல்வராஜ் கூறியுள்ளார்.
மேலும், கோவை வடகிழக்குப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை தனியாக கணக்கிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சிறுவாணி, ஆழியாறு, சோலையாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கோவை மக்களின் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில், கோவையின் வடகிழக்கு பகுதி மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர்.
அதாவது, தற்போதைய மழைக் காலத்தில் அக்ரஹாரா சாமக்குளம், இடிகரை, கூடலூர், தெக்கலூர், கிட்டாம் பாளையம், குன்னத்தூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இதனால், வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 கிராமங்கள்ளில்வறட்சி சூழ்நிலையே நிலவுவதாக பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் தெரிவிக்கின்றன.
"கௌசிகா நதியில் இருந்து வெளியேறும் உபரி நீரின் மூலம் 20 கி.மீ., தொலைவில் உள்ள கிராமங்கள் பயனடைந்து வந்தன. ஆனால், தற்போது, அனைத்து இடங்களிலும் வறட்சியே நிலவுகிறது." என்கிறார் உள்ளூர்வாசி.
மேலும், இப்பகுதிகளில் உள்ள 15 குளங்கள் மற்றும் சிறுசிறு நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. மேலும், இங்குள்ள 27 தடுப்பணைகள் மறுசீரமைக்காததால், நிலத்தடி நீரும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
"நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு போதிய ஆதரவும் மற்றும் போதிய தகவல்கள் இல்லாததே இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு காரணம். இந்தப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு தவறாக கணிக்கப்படுவது முக்கிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, வரை கோவை வடகிழக்கு பகுதிகளில் குறிப்பிடும்படி எந்தவித மழைப் பொழிவும் இல்லை." என கௌசிகா நதி பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த பி.கே., செல்வராஜ் கூறியுள்ளார்.
மேலும், கோவை வடகிழக்குப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை தனியாக கணக்கிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.