கேரள: மழை மற்றும் வெள்ளத்தால் காணாமல் போனவர்களை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேரள: மழை மற்றும் வெள்ளத்தால் காணாமல் போனவர்களை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேரளாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மாநிலமே தனித்தீவு போல காட்சியளித்து வருகிறது. வெள்ளத்திலிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்த மழை வெள்ளத்திற்கு 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் காணாமல் போகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் நிலையை அறிந்துகொள்வதறக்க கூகுள் இந்தியா நிறுவனம், பேரிடர் உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் உள்ள கூகுளின் இணையத் தேடுதல் பக்கத்திலேயே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் அளித்துள்ள goo.gl/WxuUFp என்ற தரவுத்தளத்தில் சென்று அங்கு வழங்கப்பட்டுள்ள இரு தேர்வுகளைப் பயன்படுத்தி எளிமையாகக் கண்டுபிடிக்கலாம். ஒன்று ஒருவரைப் பற்றி தேட வேண்டும், மற்றொன்று யாரைப் பற்றியாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதாகும்.
நீங்கள் யாரைத் தேட விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை அதில் பதிவு செய்தால், அந்தப் பெயரை ஒத்து இருக்கும் அனைத்தும் பெயர்களும் பரிந்துரைக்கும் அதில் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று நீங்கள் மற்றவரின் நிலை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், அதில் இருக்கும் அடுத்த ஆப்சனை கிளிக் செய்து நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டியவரின் பெயரைப் பதிவிட்டு அவரைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கலாம்.
இது குறித்து கூகுள் இந்தியா நிறுவனம் தங்களது டுவிட்டரில், 'நாங்கள் எப்போது கேரள மக்களுடன் துணை நிற்போம்’ என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளனர்.
இதேபோன்ற முறையைக் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மாநிலமே தனித்தீவு போல காட்சியளித்து வருகிறது. வெள்ளத்திலிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்த மழை வெள்ளத்திற்கு 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் காணாமல் போகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் நிலையை அறிந்துகொள்வதறக்க கூகுள் இந்தியா நிறுவனம், பேரிடர் உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் உள்ள கூகுளின் இணையத் தேடுதல் பக்கத்திலேயே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் அளித்துள்ள goo.gl/WxuUFp என்ற தரவுத்தளத்தில் சென்று அங்கு வழங்கப்பட்டுள்ள இரு தேர்வுகளைப் பயன்படுத்தி எளிமையாகக் கண்டுபிடிக்கலாம். ஒன்று ஒருவரைப் பற்றி தேட வேண்டும், மற்றொன்று யாரைப் பற்றியாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதாகும்.
நீங்கள் யாரைத் தேட விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை அதில் பதிவு செய்தால், அந்தப் பெயரை ஒத்து இருக்கும் அனைத்தும் பெயர்களும் பரிந்துரைக்கும் அதில் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று நீங்கள் மற்றவரின் நிலை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், அதில் இருக்கும் அடுத்த ஆப்சனை கிளிக் செய்து நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டியவரின் பெயரைப் பதிவிட்டு அவரைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கலாம்.
இது குறித்து கூகுள் இந்தியா நிறுவனம் தங்களது டுவிட்டரில், 'நாங்கள் எப்போது கேரள மக்களுடன் துணை நிற்போம்’ என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளனர்.
இதேபோன்ற முறையைக் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.