டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் யமுனை நதிக்கரையில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் யமுனை நதிக்கரையில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் பா.ஜ.க., தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பா.ஜ.க., தலைவர் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வாஜ்பாயின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. டெல்லி ராஷ்ட்டிரிய ஸ்ருதி ஸ்தல் என்ற பகுதியில் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.
உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் பா.ஜ.க., தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பா.ஜ.க., தலைவர் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வாஜ்பாயின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. டெல்லி ராஷ்ட்டிரிய ஸ்ருதி ஸ்தல் என்ற பகுதியில் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.