முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.
நோய் தொற்று காரணமாக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமரும், பா.ஜ.க., மூத்த தலைவருமான வாஜ்பாய் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (ஆக.,16) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 3 முறை பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
