கோவை: வால்பாறையில் வெளுத்தும் வாங்கும் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் வால்பாறை - பொள்ளாச்சி இடையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் வெளுத்தும் வாங்கும் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் வால்பாறை - பொள்ளாச்சி இடையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் மட்டுமின்றி, சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வால்பாறை அரசு போக்குவரத்து பணிமனையின் உள்ளே வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சி - வால்பாறை இடையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கொண்டு அவ்வழியாக வாகனத்தை இயக்க முடியாத அளவிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதோடு, அதிரப்பள்ளி வழியாகக் கேரள செல்லும் சாலையிலும் தடைபட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், வருவாய் துறை அலுவலர், எம்.எல்.ஏ., கஸ்தூரி வாசு உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, வீடுகளை இழந்து தவிப்பவர்களை, தற்காலிக முகாம் அமைத்து, வட்டாட்சியர் சியாமலா தேவி மற்றும் காவல் ஆய்வாளர் திரிமேணி ஆகியோர் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.
இந்த சூழலில், மழை நீரால் சூழ்ந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மனம்பள்ளி எஸ்டேட் பகுதியில் வேளாங்கண்ணி (41) என்ற பெண் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். இதேபோல, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சோலையாறு அணையின் பவர்ஹவுஸ் பொறியாளர் விக்னேஷ்வரன் (35) மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்தார். இதன்மூலம், இன்று ஒரே நாளில் மழை தொடர்பான விபத்தில் சிக்கி வால்பாறை வட்டத்தில் மட்டும் 2 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் மட்டுமின்றி, சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வால்பாறை அரசு போக்குவரத்து பணிமனையின் உள்ளே வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சி - வால்பாறை இடையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கொண்டு அவ்வழியாக வாகனத்தை இயக்க முடியாத அளவிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதோடு, அதிரப்பள்ளி வழியாகக் கேரள செல்லும் சாலையிலும் தடைபட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், வருவாய் துறை அலுவலர், எம்.எல்.ஏ., கஸ்தூரி வாசு உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, வீடுகளை இழந்து தவிப்பவர்களை, தற்காலிக முகாம் அமைத்து, வட்டாட்சியர் சியாமலா தேவி மற்றும் காவல் ஆய்வாளர் திரிமேணி ஆகியோர் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.
இந்த சூழலில், மழை நீரால் சூழ்ந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மனம்பள்ளி எஸ்டேட் பகுதியில் வேளாங்கண்ணி (41) என்ற பெண் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். இதேபோல, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சோலையாறு அணையின் பவர்ஹவுஸ் பொறியாளர் விக்னேஷ்வரன் (35) மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்தார். இதன்மூலம், இன்று ஒரே நாளில் மழை தொடர்பான விபத்தில் சிக்கி வால்பாறை வட்டத்தில் மட்டும் 2 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.