நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சாயக்கழிவு கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாயக்கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாயக்கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் வழியாக பாய்ந்து செல்லும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்து, அணைப்பாளையாம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 

இதன் காரணமாக ராயபுரம் - மங்கலம் சாலையை இணைக்கும் தரை பாலத்திலும் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பாலத்தின் வழியே பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வெள்ளப் பெருக்கைப் பயன்படுத்தி சாய ஆலையினர், சாயக்கழிவு நீரை நொய்யலாற்றில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...