கோவை : மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை : மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில தலைவர் முகமது முபாரக் தலைமையில் போத்தனூர் பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி. மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விடாமல். அன்னிய சக்திகள் தடுப்பதாக தெரிவித்தற்கு கட்சி சார்பாக கண்டனம் தெரிவித்து கொண்டனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஐ.நா.,வில் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை வேண்டுமென்றே, மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"அண்மையில் பொறுப்பேற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவியேற்பு விழாவின் போது, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான உரிய மரியாதையின்றி புறக்கணிப்பட்டனர். இந்த செயலுக்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். கேரளாவில் பேரிடர் மீட்பு பணியில் எஸ்.டி.பி.ஐ., தொண்டர்கள் ஏராளமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்," இவ்வாறு மாநில தலைவர் முகமது முபாரக் கூறினார்.
மாநில தலைவர் முகமது முபாரக் தலைமையில் போத்தனூர் பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி. மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விடாமல். அன்னிய சக்திகள் தடுப்பதாக தெரிவித்தற்கு கட்சி சார்பாக கண்டனம் தெரிவித்து கொண்டனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஐ.நா.,வில் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை வேண்டுமென்றே, மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"அண்மையில் பொறுப்பேற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவியேற்பு விழாவின் போது, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான உரிய மரியாதையின்றி புறக்கணிப்பட்டனர். இந்த செயலுக்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். கேரளாவில் பேரிடர் மீட்பு பணியில் எஸ்.டி.பி.ஐ., தொண்டர்கள் ஏராளமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்," இவ்வாறு மாநில தலைவர் முகமது முபாரக் கூறினார்.