கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைவர்கள் உருவ பொம்மையை மெழுகால் உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா.
கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைவர்கள் உருவ பொம்மையை மெழுகால் உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா.
குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா. அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது இவரது வழக்கம்.
பொங்கலின் போது தங்கத்தின் மூலம் மைக்ரோ அளவில், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். தொடர்ந்து, சிறிய அளவிலான உலகக் கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம் மற்றும் மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிவம் போன்றவற்றை வடிவமைத்திருந்தார்.

இந்தநிலையில், இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, காந்தி, திலகர், பகத்சிங், விவேகானந்தர், நேதாஜி, பாரதியார், நேரு, ஆசாத், ராஜாராம் மோகன், ஜாகீர் உசேன், அப்துல் கலாம் மற்றும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உருவங்களை மெழுகுவர்த்தியால் உருவாக்கியுள்ளார் யு.எம்.டி.ராஜா.
ஒரு கிலோ மெழுகை உருக்கி, அதில் இந்திய வரைபடத்தை வரைந்துள்ளதாகக் கூறிய அவர் இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தை இத்தலைவர்கள் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.