சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் உருவத்தை மெழுகில் செதுக்கிய கோவை யு.எம்.டி.ராஜா

கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைவர்கள் உருவ பொம்மையை மெழுகால் உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா.


கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைவர்கள் உருவ பொம்மையை மெழுகால் உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா. அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது இவரது வழக்கம்.

பொங்கலின் போது தங்கத்தின் மூலம் மைக்ரோ அளவில், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். தொடர்ந்து, சிறிய அளவிலான உலகக் கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம் மற்றும் மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிவம் போன்றவற்றை வடிவமைத்திருந்தார்.



இந்தநிலையில், இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, காந்தி, திலகர், பகத்சிங், விவேகானந்தர், நேதாஜி, பாரதியார், நேரு, ஆசாத், ராஜாராம் மோகன், ஜாகீர் உசேன், அப்துல் கலாம் மற்றும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உருவங்களை மெழுகுவர்த்தியால் உருவாக்கியுள்ளார் யு.எம்.டி.ராஜா.

ஒரு கிலோ மெழுகை உருக்கி, அதில் இந்திய வரைபடத்தை வரைந்துள்ளதாகக் கூறிய அவர் இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தை இத்தலைவர்கள் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...