பெங்களூர்: அடுத்தாண்டு ஜனவரி மாதம் 3-ம் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் மக்கள் இஸ்ரோ குறித்த செய்திகளை தெரிந்துகொள்ளும் விதமாக தொடங்கப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: அடுத்தாண்டு ஜனவரி மாதம் 3-ம் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் மக்கள் இஸ்ரோ குறித்த செய்திகளை தெரிந்துகொள்ளும் விதமாக தொடங்கப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவன் கூறுகையில், "அடுத்த 3 ஆண்டுகளில், 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் மட்டும், 22 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்த உள்ளோம்.
சந்திரனின் நிலப்பரப்பு, கனிமவளம் மற்றும் நீர் இருப்பு போன்றவற்றை கண்டுபிடிப்பதற்காக சந்திராயன் 2 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. அந்த செயற்கைக்கோள் வருகிற ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த இலக்கு தவறும் பட்சத்தில் மார்ச் மாதம் மீண்டும் செயற்கைக்கோள் செலுத்தப்படும். மேலும் இஸ்ரோ தொடர்பான செய்திகளை அனைத்து மக்களும் அறியும் வண்ணம் விரைவில் இஸ்ரோ டிவி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் இஸ்ரோவின் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்." என்றார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவன் கூறுகையில், "அடுத்த 3 ஆண்டுகளில், 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் மட்டும், 22 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்த உள்ளோம்.
சந்திரனின் நிலப்பரப்பு, கனிமவளம் மற்றும் நீர் இருப்பு போன்றவற்றை கண்டுபிடிப்பதற்காக சந்திராயன் 2 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. அந்த செயற்கைக்கோள் வருகிற ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த இலக்கு தவறும் பட்சத்தில் மார்ச் மாதம் மீண்டும் செயற்கைக்கோள் செலுத்தப்படும். மேலும் இஸ்ரோ தொடர்பான செய்திகளை அனைத்து மக்களும் அறியும் வண்ணம் விரைவில் இஸ்ரோ டிவி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் இஸ்ரோவின் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்." என்றார்.