கோவையில் பா.ஜ.க., பிரமுகரின் கடைக்கு தீ வைப்பு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை

கோவை: காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க., பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க., பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



கணபதி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் கணபதி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக இருந்து வருகின்றார். காந்திபுரம் 7-வது வீதியில் பிக் பிரேண்ட் என்ற பெயரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் முகத்தை மறைத்தபடி வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் கடை வாசலில் கடையின் ஷெட்டர்களின் இடுக்குகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.



இந்த தீ வேகமாக கடையின் ஷட்டர் முழுவதும் பரவியது. பின்னர் இங்கு அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அனைத்து ரத்தனகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் புவேனேஸ்வரனுக்கு தொழில் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அரசியல் ரீதியாகவோ அல்லது உட்கட்சி பிரச்சனை காரணமாகவோ புவனேஸ்வரன் கடைக்கு தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஷட்டர் மட்டும் எரிந்த நிலையில் உள்ளே இருந்த சுமார் 8 லட்சம் மதிப்புள்ள துணிகள் தூசி படிந்து பயன்படுத்த முடியாத நிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...