கோவை: கோவை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் மத்திய கயிறு வாரியத் துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் மத்திய கயிறு வாரியத் துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்து சேவையை அதிகரிக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கொங்கு குளோபல் ஃபார்ம் வலியுறுத்தியது. மேலும், கோவையில் இருந்து அரபு நாடுகளுக்கு நேரடி விமானச் சேவையும், அதிகாலையில் டெல்லி செல்வதற்கான விமான சேவையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய கயிறு வாரியத்துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை கடந்த 9-ம் தேதி சந்தித்து பேசினர். அப்போது, கோவை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
