வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்கு உதவ விரும்புகிறீர்களா...? முதலமைச்சர் நிவாரண நிதிக்கான வங்கிக் கணக்கை வெளியிட்ட கேரள அரசு

கேரளா : தொடர் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் முதலமைச்சர் பினராயி விஜயன், தனது வங்கிக் கணக்கை வெளியிட்டுள்ளார்.


கேரளா : தொடர் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் முதலமைச்சர் பினராயி விஜயன், தனது வங்கிக் கணக்கை வெளியிட்டுள்ளார். 



கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையினால், கேரள மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய கடலோர தகவல் சேவை மையமும், கேரளாவில் 15 ஆம் தேதி வரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 



மழை ஒருபுறம் பெய்து கொண்டிருக்க, பெரும்பாலான அணைகள் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டதால், 8 மாவட்டங்கள் கடலுக்குள் மூழ்கியது போல, தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை, வெள்ள பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். முப்படையும் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 32 ராணுவ விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 



ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு வரும் 13ஆம் தேதி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவுடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், நிதியுதவி வழங்க விரும்புவோருக்காக தனது வங்கிக் கணக்கையும் (67319948232, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, திருவனந்தபுரம் கிளை, ஐ,எப்.எஸ்.சி. எண் : SBIN0070028) அவர் வெளியிட்டுள்ளார். உதவ நினைப்பவர்கள் மேற்கண்ட வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளப்பாதிப்பைப் பார்வையிடுவதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை (ஆக.,12) கேரளா வருகிறார். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளார். இதுவரை கேரளாவிற்கு தமிழகம் ரூ. 5 கோடியும், கர்நாடகா ரூ. 10 கோடியும், புதுச்சேரி ரூ.1 கோடியும் நிதியுதவியாக அறிவித்துள்ளன. 

இதனை தொடர்ந்து கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியும் ,வெள்ளத்தால் வீடுகள், விளை நிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...