கோவை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை வழிமறித்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை வழிமறித்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டேல் வீதிகாட்டூரைச் சேர்ந்த காளியின் மகன் சரவணன் (40) என்கிற சரவணகாந்த். இவர் மேல் ரத்தினபுரி, காட்டூர், பீளமேடு, புலியகுளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற 18 வழக்குகள் உள்ளன. கடைசியாக ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி கடந்த 8 மாதத்திற்கு முன்பு மத்திய சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 7.00 மணியளவில் சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் (TN 38 AF 8197) சென்று கொண்டிருந்தார். அப்போது, சோமசுந்தரா மில் அருகே உள்ள ரயில்வே பாலத்திற்கு முன் இவரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளனர்.
அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரவணனின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காட்டூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சரவணன் கடந்த 2004-ம் ஆண்டு பழையூர் பாப்பநாயக்கன்பாளையத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, கத்தியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், பீளமேடு பகுதியில் காரை ஏற்றி ஒருவரை கொலை செய்தது உட்பட 18 வழக்குகள் அவர் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.
பட்டேல் வீதிகாட்டூரைச் சேர்ந்த காளியின் மகன் சரவணன் (40) என்கிற சரவணகாந்த். இவர் மேல் ரத்தினபுரி, காட்டூர், பீளமேடு, புலியகுளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற 18 வழக்குகள் உள்ளன. கடைசியாக ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி கடந்த 8 மாதத்திற்கு முன்பு மத்திய சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 7.00 மணியளவில் சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் (TN 38 AF 8197) சென்று கொண்டிருந்தார். அப்போது, சோமசுந்தரா மில் அருகே உள்ள ரயில்வே பாலத்திற்கு முன் இவரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளனர்.
அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரவணனின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காட்டூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சரவணன் கடந்த 2004-ம் ஆண்டு பழையூர் பாப்பநாயக்கன்பாளையத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, கத்தியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், பீளமேடு பகுதியில் காரை ஏற்றி ஒருவரை கொலை செய்தது உட்பட 18 வழக்குகள் அவர் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.