கிணற்றின் அருகே கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிந்து விழுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் படுகாயம்

திருப்பூர்: திருப்பூரில் கிணற்றின் அருகே கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கிணற்றின் அருகே கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். 



கே.ஆர்.ஆர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க., பிரமுகர் வாசிமலை. இவருக்குச் சொந்தமான இடத்தில் சிறிய, சிறிய வீடுகளாகக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில், பெரும்பாலான அறைகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.



இவர்கள் தங்கியிருக்கும் அறைகளை ஒட்டியவாறு ஒரு பகுதியில் கிணறு அமைந்துள்ளது. அந்தக் கிணற்றை சுற்றி 10க்கும் மேற்பட்ட அறைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், இன்று காலை திடீர் என்று அங்கிருந்த மூன்று வீடுகள் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தன. இதில், வீட்டில் இருந்த 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

இதையறிந்த, அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் சிலர், வாசிமலைக்குச் சொந்தமான இடத்தை முற்றுகையிட்டனர். அப்போது, வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் கட்டப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 



மேலும், இதுகுறித்து பலமுறை நகராட்சி ஆணையாளர் முதல் கோட்டாட்சியர் வரை பலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் பொதுமக்கள், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகப் புகார் தெரிவிக்கின்றனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...