சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இரவு முழுவதும் அழுது தீர்த்த தி.மு.க., தொண்டர்களின் முகம் மலர்ந்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இரவு முழுவதும் அழுது தீர்த்த தி.மு.க., தொண்டர்களின் முகம் மலர்ந்துள்ளது.
தீர்ப்பு குறித்த விவரம் கேட்டறிந்த ஸ்டாலின், கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து, மக்களை நோக்கி கைகூப்பி வணங்கினார். தலைமையும், தந்தையுமான கருணாநிதி இறந்த துயரில் இருந்த அவர், மெரீனா செய்தியைக் கேட்டறிந்து கண்ணீர் மல்க நன்றிகளைத் தெரிவித்தார்.

இதுவே தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் நாட்டை ஆள்வதற்கு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்த பெருமை மிக்க நொடிகளில் அங்கு திரண்டிருந்த தி.மு.க.,வினர் தலைவருக்கான அஞ்சலி கண்ணீருடன், ஆனந்தக் கண்ணீரையும் சேர்த்தே வடித்தனர்.
ராஜாஜி அரங்கத்தில் திரண்டிருந்த தி.மு.க.,வினர் தீர்ப்பை அறிந்தவுடன் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு, "வாழ்க., வாழ்க.," என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.